கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள,பா.சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள,பா.சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள,பா.சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள,பா.சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா, கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவரும், திமுக பேரூர் கழக செயலாளருமான, கே.ரவிச்சந்திரன்தலைமையில் நடைபெற்றது. விழாவில், முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் டி.இளங்கோ வரவேற்புரையாற்றினார். சத்தி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விழாவிற்கு, கெம்பநாயக்கன் பாளையம் பேரூர் கழக துணை செயலாளர் ரஜினி தம்பி முன்னிலை வகித்தார். விழாவில், வார்டு கவுன்சிலர் ஜோதி ரமேஷ், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி நவீன் குமார் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
Next Story