போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஊர்வலம்
கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை வரை வந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் ஆஜாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசீம், பொருளாளர் ஷேக் ஹம்தான், துணை தலைவர் சாலிக்பாஷா, துணை செயலாளர் அப்துல் கரீம் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் அப்துல்கரீம், மாநில செயலாளர் சேட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கச்சேரி சாலையில் நடந்த கூட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
Next Story