போலீசை மிரட்டிய வாலிபர் கைது

போலீசை மிரட்டிய வாலிபர் கைது
கைது
மணலுார்பேட்டை அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.வாணாபுரம் அடுத்த பள்ளிச்சந்தல் சேர்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசபெருமாள்,33. இவர் நேற்று முன்தினம் ஜம்பை கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ., வினோதினி பணியில் இருந்தபோது, அவரை ஆபாசமாக திட்டினார். இது தொடர்பாக மணலுார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்பேரில் சிறப்பு இன்ஸ்பெக்டர் திருமலைராஜன் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வி.ஏ.ஓ.,வை ஆபாசமாக திட்டிய வெங்கடேசபெருமாளிடம் விசாரித்தனர். அப்போது போலீசார் இருவரையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தனிப்பிரிவு போலீஸ் பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில், வெங்கடேசபெருமாளை மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Next Story