அரகண்டநல்லுார் பேரூராட்சி கூட்டம்

அரகண்டநல்லுார் பேரூராட்சி கூட்டம்
கூட்டம்
அரகண்டநல்லுார் பேரூராட்சியின் சாதாரண கூட்டம், பேரூராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. பேரூராட்சி சேர்மன் அன்பு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் முரளி வரவேற்றார். துணைத் சேர்மன் கதீஜாபீவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பழுதடைந்திருக்கும் சமுதாயக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். புதிதாக வணிக வளாகம் கட்டுவது. தேவையான வாடுகளில் சிறுவர் பூங்கா உருவாக்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தலைமை எழுத்தர் பாலா உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story