புதிய பேருந்து நிறுத்தம் கட்டும் பணி துவக்கம்!

புதிய பேருந்து நிறுத்தம் கட்டும் பணி துவக்கம்!
குளத்தூர் அருகே ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில், ரூ.6.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டும் பணியை யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது நிதிக்குழுவின் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனிய சக்தி இராமச்சந்திரன் இன்று பூமி பூஜை செய்து பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
Next Story