வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த

மாவட்ட அளவிலான முகாம்
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை கலெக்டர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார். சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ஆகியோர் முன்னிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் துறைசார்ந்த கள அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்குபெற்று விவசாயிகளுக்கு இயந்திரங்களை முறையாக பராமரிக்கும் முறையினையும் மேலும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
Next Story