தேவூரில் எம்பி ஒரு கோடியே ஏழு லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!

தேவூரில் எம்பி ஒரு கோடியே ஏழு லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!
சங்ககிரி:தேவூரில் எம்பி எம் செல்வகணபதி ஒரு கோடியே ஏழு லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.....
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்..... சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் பேரூராட்சியில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று நகர்புரம் மேம்பாடு திட்டத்தின் கீழ் அம்மாபாளையம், தேவூர் ஆகிய பகுதிகளில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, கான்கிரீட் சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக சேலம் பாராளுமன்ற உறுப்பினரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார். அப்போது மாவட்டத் துணைச் செயலாளர் சம்பத்குமார் , இடங்கணசாலை நகர செயலாளர் செல்வம், தேவூர் பேரூராட்சி தலைவர் தங்கவேல், துணைத்தலைவர் தன்ராஜ்,பேரூர் திமுக செயலாளர் முருகன் மற்றும் தங்கவேலன் உட்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story