ஆதரவற்றோர் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஆதரவற்றோர் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் பாசம் ஆதரவற்றோர் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதனை குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்த குமார், 42, நிர்வகித்து வருகிறார். இந்த மையத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அரசு அனுமதி பெற வேண்டும் என்று நடைமுறை உள்ளதால், அரசு அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, சமூக நலத்துறை அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தங்கும் இடம், உணவு உண்ணும் இடம், படுக்கைகள், கழிப்பிடங்கள், சமையலறை, ஸ்டோர் ரூம், மேலும் தங்கி உள்ளவர்கள் விபரம், வரவு, செலவு பதிவேடுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
Next Story