விசிக சார்பில் திருமாவளவன் பிறந்த நாளை முப்பெரும் விழாவாக கொண்டாடிய கட்சியினர்

விசிக சார்பில் திருமாவளவன் பிறந்த நாளை முப்பெரும் விழாவாக கொண்டாடிய கட்சியினர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 62 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கணியூர் தனியார் மண்டபத்தில் முப்பெரும் விழாவாக அக்கட்சியினர் பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கி கொண்டாடினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவனின் 62 பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினர் முப்பெரும் விழாவாக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் கணியூர் தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பழ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவபரசு பங்கேற்று சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மண்டல துணைச் செயலாளர் முருகன்,திருப்பூர் தெற்கு செயலாளர் சதீஷ்குமார் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் விழாவாகவும், தேர்தல் அரசியலில் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவாகவும், மாநில கட்சியாக அங்கீகார வெற்றி விழாவாகவும் முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story