வாகன விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ!

வாளவாடி-அம்மாபட்டி பிரிவு பகுதியில் விவசாய பணிக்காக சரக்கு வாகனத்தில் 53 பேர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வளைவில் திரும்பும்போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினார்
வாளவாடி-அம்மாபட்டி பிரிவு பகுதியில் விவசாய பணிக்காக சரக்கு வாகனத்தில் 53 பேர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வளைவில் திரும்பும்போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையில் 19 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மேல் சிகிச்சைக்காக ஆறு பேர் கோவை மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி உரிய சிகிச்சை வழங்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
Next Story