குடி போதையில் கணவன் பலி மனைவி போலீசில் புகார்

குடி போதையில் கணவன் பலி மனைவி போலீசில் புகார்
குமாரபாளையத்தில் கணவன் குடி போதையில் பலியானதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சூரியகிரி மலை அருகே வசித்து வந்தவர் முத்துசாமி, 40. டிரைவர். இவரது மனைவி சத்யா, 33. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆனது. முத்துசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடித்து விட்டு எந்நேரமும் போதையில் இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் சத்யா வேலைக்கு சென்று விட்டு, இரவு 07:30 மணியளவில் வந்ததால் வீட்டின் கதவை தட்டி பார்த்து, போதையில் கதவினை திறக்க மாட்டார் என்று எண்ணி, வெளியில் படுத்துக்கொண்டார். நேற்று காலை 07:30 மணியளவில் எழுந்து, கதவை தட்டியும், ஜன்னல் வழியாக குச்சியை விட்டு, முத்துசாமியை எழுப்ப முயற்சித்தும் பலனில்லை. அதனால் கதவின் கண்ணாடியை உடைத்து, தாழ்பாள் நீக்கி,உள்ளே சென்று முத்துசாமியை பார்த்த போது மூச்சு, பேச்சில்லாமல் இருந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். போதையில் கணவர் இறந்ததாக சத்யா குமாரபாளையம் போலீசில் தெரிவித்துள்ளார்.
Next Story