மீமிசல் ஆற்றில் ரோஸ் நிற தண்ணீர்: பொதுமக்கள் பீதி

X
புதுக்கோட்டை மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் ஆற்றில் இருந்து கடலுக்கு செல்லும் தண்ணீர் ரோஸ் நிறத்தில் இருப்பதால் மீனவர்களும், பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர். மேலும், தொற்று நோய் பரவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனால் கடலில் உள்ள மீன்களும் உயிரிழக்கக்கூடும் என்று பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த ரோஸ் நிற தண்ணீர் எங்கிருந்து வந்தது என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். .
Next Story

