தேவண்ணகவுண்டனூர் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்‌..

தேவண்ணகவுண்டனூர் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்‌..
சங்ககிரி:தேவண்ணகவுண்டனூர் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில பள்ளித்தலைமையாசிரியை .வசந்தாள் தலைமை நடைபெற்றது. இதில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.முருகன் வரவேற்றார். சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் .சந்தோஷ்குமார் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தை ஆய்வு செய்து பெற்றோர்களிடத்தில் பேசினார் அதில் பள்ளி மேலாண்மை குழு என்பது பள்ளியின் அனைத்து வளர்ச்சிக்கும், மாணவ, மாணவிகளின் கல்விக்கும் உதவும் அமைப்பாகும் என்றார். மேலும் அவர் தேர்ந்தெடுக்கப்படும் மேலாண்மை குழுவினர் பணிகள், பெற்றோர்கள் எவ்வாறு அவர்களுக்கு உதவுவது குறித்து விளக்கிப் பேசினார். இக்கூட்டத்தை சங்ககிரி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் மூர்த்தி பார்வையாளராக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்றார். பள்ளி மேலாண்மைகுழுதலைவியாக .சத்யா, துணைத்தலைவர் கார்த்திகா, ஆசிரியர் பிரதிநிதி ரமாமகேஷ்வரி, உள்ளாட்சி பிரதிநிதியாக தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி மன்றத்தலைவர் சாரதா, ஊராட்சி வார்டு உறுப்பினர் கு.தேவிகா, முன்னாள் மாணவர் சீனிவாசன், முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் சித்ரா, தவமணி, மைதிலி, ஜெயந்தி உள்ளிட்ட 24 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் க.சீனிவாசன், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story