பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா
விழா
ரிஷிவந்தியத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.ரிஷிவந்தியம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விழாவிற்கு சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், பெண் தலைமை காவலர் சுமதி முன்னிலை வகித்தனர். தனிப்பிரிவு காவலர் ராமச்சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், கடந்த 37 ஆண்டுகளாக காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அப்துல் லத்தீப் பணியை பாராட்டி, சக காவலர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அப்துல் லத்தீப் ஏற்புரை வழங்கினார்.
Next Story