கல்லாலங்குடி முத்துமாரிம்மனுக்கு பால் அபிஷேகம்

கல்லாலங்குடி முத்துமாரிம்மனுக்கு பால் அபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்நிலையில் இன்று, ஆவணி மாத 3வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. பின்னர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story