பூங்காவை பராமரிக்க மக்கள் கோரிக்கை

பூங்காவை பராமரிக்க மக்கள் கோரிக்கை
பூங்காவை பராமரிக்க மக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருக்கட்டளை கிராமத்திற்குட்பட்ட தமிழ் நகரில் அம்ரித் திட்டத்தின் கீழ் 41.50 லட்சம் செலவில் 2016-17 பூங்கா அமைக்கப்பட்டது. கஜா புயலில் அந்தப் பூங்காவில் உள்ள ஷெட் உடைந்து விழுந்தது. அதனை பராமரிக்க தவறியதால் அதனை யாரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், காலை நேரத்தில் நடை பயிற்சி செய்யும் பாதையில் செடி கொடிகள் மண்டி உள்ளது. இதனை பராமரிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story