மகா நாட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மகா நாட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
திருவிழா
சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் மகா நாட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. இக்கோவில் தேர் திருவிழாவையொட்டி, கடந்த மாதம் 23ம் தேதி காப்பு கட்டி கொடியேற்று விழா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச்செய்து, தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். விழாவில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன், அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, தொழிலதிபர் கதிரவன் உள்ளிட்ட சுற்றுப் புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story