சங்கராபுரத்தில் படத் திறப்பு விழா

சங்கராபுரத்தில் படத் திறப்பு விழா
விழா
சங்கராபுரம் அடுத்த திம்மநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அரசு ஒப்பந்ததாரர். இவரது மனைவி ராணி அம்மாள்.இவர் கடந்த மாதம் இறந்தார். இவரது படத்திறப்பு விழா நேற்று திம்மநந்தல் கிராமத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மலையரசன் எம்.பி., தொழிலதிபர்கள் வேலுசாமி, கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ராஜேந்திரன், அசோக், ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ராணியின் படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், ராணியின் மகன்கள் ரமேஷ்குமார், சுரேஷ், சுதாகர், அம்மன் ஏஜன்சி கோவிந்தராஜி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Next Story