வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா

வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா
விழா
உளுந்துார்பேட்டையில் வியாபாரிகள் சங்க கட்டடத்தின் புதிய முதல்தளம் திறப்பு விழா, 62ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், வெள்ளையூர் மறுவாழ்வு இல்லத்தில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுகனி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். புதிய முதல் தள கட்டடத்தை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
Next Story