வளையப்பட்டி காலனி பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்

20 நாட்களாக குடிநீர் வழங்காததால் காளி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி காலனி பகுதி மக்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பணிக்கம்பட்டி நான்கு ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விசிக முன்னாள் குளித்தலை ஒன்றிய செயலாளர் மாயவன் உள்ளிட்ட பெண்கள் பலரும் காலி குடங்கள் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story