தாளவாடியில் வெடி பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

தாளவாடியில் வெடி பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
தாளவாடியில் வெடி பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது தாளவாடி மலைப்பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொபெட்டில் வந்த நபர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றியும் , அதற்கான உரிமம் இல்லாமலும் எடுத்து வந்த வெடி பொருளான ஜெலட்டின் குச்சிகள் 38 மற்றும் வெடி மருந்துகளுடன் கூடிய அலுமினிய குப்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தாளவாடி அருகே உள்ள ஓசூர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (47), என தெரியவந்தது. தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story