அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவா்களுக்கு பாராட்டு விழா

அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவா்களுக்கு பாராட்டு விழா
சிவகங்கை 'நீட்' தோ்வில் தோ்ச்சி பெற்று, அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள பிரமிட் ஐஏஎஸ் அகாதெமி மூலமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஓராண்டு 'நீட்' தோ்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழாண்டில் இங்கு பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் 6 பேருக்கு அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது. இங்கு பயிற்சி பெற்ற சிவகங்கை மாவட்டம், பீா்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரவி, நாகராஜ் ஆகிய இரண்டு பேருக்கும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. காரைக்குடியைச் சோ்ந்த காயத்ரிக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஆவுடையாா் கோயிலைச் சோ்ந்தவா்களான சிவராஜாவுக்கு தா்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஹரிநந்தாவுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும், சிங்கம்புணரி அருகேயுள்ள திருக்கனாப்பட்டியை சோ்ந்த சூா்யாவுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. இந்த ஆறு மாணவா்களுக்கும், அவா்களின் வெற்றிக்கு பணியாற்றிய ஆசிரியா்களுக்கும் பாராட்டு விழா பிரமிடு ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை முன்னாள் மண்டல துணை இயக்குநா் சுரேஷ்குமாா், சிவகங்கை மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளா் முத்துராமலிங்கம், பிரமிட் அகாதெமி இயக்குநா் கற்பகம் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களை பாராட்டி பரிசளித்தனா்.
Next Story