விவசாயிகள் நலச்சங்கத்தினர் தண்ணீர் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்

விவசாயிகள் நலச்சங்கத்தினர் தண்ணீர் பிச்சை எடுக்கும் நூதன  போராட்டம்
விவசாயிகள் நலச்சங்கத்தினர் தண்ணீர் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்
ஆலங்குடி வடகாடு முக்கத்தில், சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளாகியும் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும், தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் நேரடியாக கடலில் கலப்பதைக் கண்டித்தும், புதுக்கோட்டை விவசாயிகள் நலச்சங்கம் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில், விவசாயிகள் நலச்சங்கத்தினர் ஏர் கலப்பையை ஏந்திக்கொண்டும், தலையில் மண் பானையை வைத்து தண்ணீர் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாடு முக்கத்திலிருந்து சந்தைப்பேட்டை செட்டிகுளம் வரை தண்ணீர் பிச்சை கேட்டு நடந்து சென்றனர். இதில், விவசாயிகள் நலச்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story