சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை
பெட்டிக்கடையில் லாட்டரி விற்ற நபர் கைது லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா தேவசிங்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் மகன் நாகராஜன் (34). இவர் நேற்று தனது சொந்தமான பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story