குமாரபாளையம் தொகுதியில்  தி.முக.வை வெற்றி பெற வைப்பது என் நன்றிக்கடன் ஈரோடு எம்.பி. பேச்சு

குமாரபாளையம் தொகுதியில்  தி.முக.வை வெற்றி பெற வைப்பது என் நன்றிக்கடன் என ஈரோடு எம்.பி. கூறினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு, தெற்கு நகர தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நகர பொறுப்பாளர்கள்  விஜய்கண்ணன், ஞானசேகரன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு எம்.பி. பிரகாஷ், நாமக்கல் மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்று பேசினர். எம்.பி. பிரகாஷ் பேசியதாவது: எனது வெற்றிக்காக நீங்கள் அயராது பாடுபட்டதை மறக்க மாட்டேன். இதற்கு நன்றிக்கடனாக, குமாரபாளையம் தொகுதியில் உங்கள் ஆதரவுடன் தி.மு.க.வை வெற்றி பெற வைப்பேன். தி.மு.க. கோட்டை என்று மாற்றி காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட அவை தலைவர் நடனசபாபதி, மாவட்ட பொருளர் ராஜாராம், நகர்மன்ற துணை தலைவர் வெங்கடேசன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story