தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட மதுரை டி.வி.எஸ் மேல்நிலை பள்ளியின் தொழில்கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட மதுரை டி.வி.எஸ் மேல்நிலை பள்ளியின் தொழில்கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு
பாரதியுவகேந்திரா அமைப்பின் நிறுவனம் சார்பில் பாராட்டு*
மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியின் தொழில்கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டதும் மதுரை சுந்தராஜபுரம் பகுதியில் உள்ள டிவிஎஸ் சுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் பள்ளி செயலாளர் வெங்கட்நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியை வித்யாவதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர் முரளிதரனுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கொளரவப் படுத்தினர். கடந்த 38 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் முரளிதரன் கொரோனா காலங்களில் ஆட்டோமொபைல் தொடர்பாக வீடியோக்களை பதிவு செய்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இவரது ஆசிரியர் பணியை பாராட்டி 2021 ஆம் ஆண்டு மாநில அரசு இவருக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஆசிரியர் முரளிதரன் அளித்த பேட்டியில், "கடந்த 38ஆண்டுகளாக டி.வி.எஸ் மேல்நிலை பள்ளியில் தொழில் கல்வி (ஆட்டோ மொபைல்) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மிகவும் கஷ்டப்பட்ட ஏழை மாணவர்களுக்கு தொழில் கல்வியை கற்று கொடுத்துள்ளேன். மதிப்பெண் குறைந்த மாணவர்கள் சமூக விரோத செயலுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி கவுன்சிலிங் கொடுத்து கற்றுக்கொடுத்தேன்.பள்ளியில் நான் செய்த சின்ன சின்ன வேலைகள் சாதனைகளாக மாறி தேசிய நல்லாசிரியர் விருதாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மேலும் கல்வி மட்டும் சொல்லி கொடுக்காமல் கவுன்சிலிங் கொடுத்து கற்பித்தேன்‌ . கொரோனா காலத்தில் வீடியோ மூலம் கற்று கொடுத்தேன். தினமும் இரண்டு முதல் 4 வீடியோ பதிவேற்றம் செய்தேன். புத்தகத்தை வீடியோவாக மாற்றினேன் அதோடு பார்வையற்றோருக்காக ஆடியோ என வீடியோ பதிவேற்றம் செய்தேன் இப்படி 60க்கும் மேற்பட்ட வீடியோ போட்டு மாணவர்களை படிக்க வைத்தேன் என்றார். இளம் ஆசிரியர்களுக்கு தான் கூறும் அறிவுரை : யாரும் நம்மை கண்ட்ரோல் பண்ணுகிறார்கள் என நினைக்க கூடாது. பாடம் மட்டும் நடத்தி விட்டு செல்லாமல் அவர்களுக்கு கவுன்சிலிங் பண்ணனும். மாணவர்களிடம் அன்பாக பேசனும். அன்பாக பேசினாலே மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதை கேட்பார்கள் ஏழை மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கியதன் மூலம் அவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து சர்வதேச அளவில் பணியாற்றி புதிய கண்டுபிடிப்புகளை வெளி கொண்டு வந்து உள்ளார்கள். இந்த விருதை எனது குடும்பம் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.மாணவர்கள் முன்னேற்றத்திற்க்காக பாடுபடுவேன், மாணவர்களுக்காக நான் செய்த பணிகளை தொடர்ந்து செய்வேன்" என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
Next Story