சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு*

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு*
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
லிம்ராஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், நாயகம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பு சார்பில் முதலாவது மாநில அளவிலான 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிலம்பம் போட்டிகள் மதுரை கோ.புதூர் தே.நொபிலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், குழுப் போட்டிகள் என 4 வகையாக போட்டிகளில் 700-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மதுரை மாநகர காவலர்களின் குழந்தைகள் சார்ந்த ரிசர்வ் லைன் மாரியம்மன் சிலம்பாட்ட குழு சிலம்பம் குழுப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகளின் மற்றும் பயிற்சியாளர்கள் திரு. ரஞ்சித், திரு. தினேஷ் குமார் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
Next Story