வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறுப்பு ஏற்பு

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறுப்பு ஏற்பு
பொறுப்பு ஏற்பு
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பி.டி.ஓ.,க்களாக பணிபுரிந்த சந்திரசேகரன் கள்ளக்குறிச்சிக்கும், நடராஜன் திருக்கோவிலுாருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பதிலாக, வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக துரைமுருகன், கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக ஜெகநாதன் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பொறுப்பேற்று கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற பி.டி.ஓ.,க்களுக்கு அலுவலக பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story