கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலி
பலி
தியாகதுருகம் அடுத்த புக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி தையல்நாயகி, 65; இவர் நேற்று இரவு 7:30 மணிக்கு தியாகதுருகம் மலையம்மன் கோவில் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இன்னோவா கார் தையல்நாயகி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story