பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த அமைச்சர்!

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 2022 - 23 ஆம் ஆண்டின் மொத்த மதிப்பீட்டில் 37.70 லட்சம் நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை
காரத்தொழுவு கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 2022 - 23 ஆம் ஆண்டின் மொத்த மதிப்பீட்டில் 37.70 லட்சம் நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சுகாதார வளாகம் , மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மகாலட்சுமி பெரியசாமி நிதியில் பேவர் பிளாக் மற்றும் ஆழ்துளை கிணற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன் , திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக்அலி , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஏ.சாகுல்ஹமீது , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் சிவக்குமார் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் இளங்கோவன் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் லதாபிரியா ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் ஒன்றிய குழு தலைவர் காவியா ஐயப்பன் , மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மகாலட்சுமி பெரியசாமி, காரத்தொழுவு ஊராட்சி திமுக கழக கிளை செயலாளர் ஜான்ஷா அலி ( ஜானி ) , காரத்தொழுவு ஊராட்சி கழக பொருளாளர் மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story