சுதந்திர தின மாட்டு வண்டி பந்தயம்

சுதந்திர தின மாட்டு வண்டி பந்தயம்
திருப்புத்துார் அருகே சுதந்திர தின மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே ஆவணிப்பட்டியில் நடந்த சுதந்திர தின மாட்டு வண்டிப்பந்தயத்தில் 36 வண்டிகள் பங்கேற்றன. கிராமத்தார்கள், இளைஞர்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்களால் சுதந்திர தின மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படுகிறது. பெரியமாடு, சிறிய மாடு ஆகிய பிரிவுகளில் ஆவணிப்பட்டி - கீழச்சிவல்பட்டி சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகளும், 6 மைல் துாரமுள்ள சிறிய மாடு பிரிவில் 26 ஜோடிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இரு ஓரங்களிலும் நின்று ஏராளமானோர் சாலையில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்தனர்.
Next Story