கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை போலீசார் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை போலீசார் விசாரணை
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை போலீசார் விசாரணை
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை போலீசார் விசாரணை ஈரோடு மாவட்டம் கடத்தூர், ராக்கனகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும் கோபிசெட்டி பாளையம் பெரிய மொடச்சூர், அண்ணா நகரை சேர்ந்த சமுத்ரா (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. லட்சுமணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வந்தார். மற்ற நேரங்களில் நடுபாளையத்தில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சமுத்ரா தானும் வேலைக்கு செல்வதாக கடந்த சில மாதங்களாக கணவரிடம் கூறி வந்துள்ளார். ஆனால் லட்சுமணன் மனைவியை வேலைக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டாரும் கணவன் - மனைவியை சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சமுத்ரா தனது தாயிடம் போன் செய்து எங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை நானே பேசி தீர்த்து கொள்கிறேன் என்று கூறி போனை வைத்து விட்டார். பின்னர் மாலை வீட்டில் இருந்த சமுத்ரா தூக்குபோட்டு கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சமுத்ரா இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story