போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த நாகராணி என்பவர் தனது வீட்டின் அருகில் வசித்து வரும் நடராஜன் (80) என்பவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடலூர் காவல் துறையினர் நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று நடராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பு அளித்தார்
Next Story