கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (39) திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், தனது தம்பி மகள் காதுகுத்து விசேஷத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சத்தி - கோவை ரோட்டில் செண்பகப்புதூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் வீடு திரும்பாததால் சத்தி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். சத்தி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், நீரில் மூழ்கிய குணசேகரனை தீவிரமாகத் தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து, நீரில் மூழ்கிப் பலியான குணசேகரனின் உடல், சம்பவ இடத்திலிருந்து சிறிது தொலைவில் அவரது உடலை மீட்க்கப்பட்டது. அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story