மெழுகுவர்த்தி ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் வீரபுத்திரன் தலைமை தாங்கினார். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பயிற்சி டாக்டருக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story