மின் மோட்டார் வயரை அறுத்து வீசிய நான்கு பேர் மீது வழக்கு

மின் மோட்டார் வயரை அறுத்து வீசிய நான்கு பேர் மீது வழக்கு
லாலாபேட்டை போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுத்து (64). இவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி தனக்கு சொந்தமான ஆடு, மாடுகளை தனது தோட்டத்தில் உள்ள கிணறு அருகே மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, சந்துரு, சஞ்சய், நந்தகுமார் ஆகிய 4 பேர் தகாத வார்த்தையால் திட்டி மின் மோட்டார் வயர்களை அறுத்து மீட்டர் பெட்டியை அடித்து உடைத்து கிணற்றில் வீசி விட்டனர். இது குறித்து பாலமுத்து அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு.
Next Story