திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து.

திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து.
திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 69. இவர் செப்டம்பர் 1-ம் தேதி இரவு 8:45 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருக்காம்பூர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது, அருகில் உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற ரவிச்சந்திரன் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரவிச்சந்திரனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story