நகராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு நகராட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு

நகராட்சி கடைகள்  ஏலம் ஒத்தி வைப்பு நகராட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு
குமாரபாளையம் நகராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட கடைகள் உள்ளிட்ட ஆண்டு உரிமை இனங்களுக்கான ஏலம் நேற்று நடப்பதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான கடை மற்றும் ஆண்டு உரிம இனங்களுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நவ. 3, 2024ல் நடைபெறவிருந்ததை நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது ஏலம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்திருத்தார். மேலும் ஏலம் நிறுத்தி வைப்பதால் சில நபர்களால் நகராட்சி அலுவலக முன்பு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டி நகராட்சி ஆணையாளர் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கோரி கடிதம் வழங்கி எடுத்து நகராட்சி அலுவலகம் முன்பு மூன்று மணி நேரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இதன் காரணமாக நகராட்சி வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது
Next Story