அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   மாணவர் பேரவை துவக்க விழா
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 -2025 ம் ஆண்டிற்கான மாணவர் பேரவை துவக்க விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் பேரவை துவக்க விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. கல்லூரியின் முதல்வர் மற்றும் பேரவைத் தலைவருமான ரேணுகா, மாணவர் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார். மாணவர் பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரவை தலைவராக அசிஸ்தாஸ், துணைத்தலைவராக நரசிம்மன், செயலாளராக லோகேஷ்வரன், இணைச்செயலாளராக விக்ஷ்ணுரூபா, பொருளாளராக சுபாஷ், என்.எஸ்.எஸ். செயலாளராக பிரகாஷ், விளையாட்டு செயலாளராக மனோஜ், நுண்கலை மன்ற செயலாளராக மோகன்ராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். வணிகவியல் துறைத் தலைவரும் பேரவையின் துணைத்தலைவருமான முனைவர் இரகுபதி உள்ளிட்ட அனைத்து துறைத்தலைவர்களும் பங்கேற்றனர்.
Next Story