தளவாபாளையம்- டூவீலர்கள் மோதல். சிறுமி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
Karur King 24x7 |5 Sep 2024 11:03 AM GMT
தளவாபாளையம்- டூவீலர்கள் மோதல். சிறுமி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
தளவாபாளையம்- டூவீலர்கள் மோதல். சிறுமி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கிழக்கு தவிட்டு பாளையம் அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 64. இவரது பேத்தி யுவஸ்ரீ வயது 8-. இவர்கள் இருவரும் செப்டம்பர் 3ஆம் தேதி காலை 8:30- மணி அளவில், கரூரிலிருந்து தளவாபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள எஸ் எஸ் ஆட்டோ ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தின் எதிரே செல்லும் போது, அதே சாலையில் பின்னால் வந்த, கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, பழனி முத்துநகர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் பிரபு வயது 21 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ஆனந்தன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆனந்தன் ஓட்டிய வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த அவரது பேத்தி யுவஸ்ரீக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story