க. பரமத்தி- அதிகாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

க. பரமத்தி- அதிகாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
க. பரமத்தி- அதிகாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா கா பரமத்தி காவிரி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சிவராமு வயது 29. இவர் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 4:30 மணி அளவில் கோவை- கரூர் சாலையில், க.பரமத்தி கே.பி. சாமி சைக்கிள் ஷாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று வேகமாக சென்று, நடந்து சென்ற சிவராமன் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிவராமுவை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சிவராமு -வின் மனைவி நளினி வயது 25 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த நான்கு சக்கர வாகனம் எது? அதை ஓட்டியவர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.
Next Story