பாப்பாத்தி அம்மன் மகா கும்பாபிஷேக விழா

பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரத்தனம் பிள்ளைப்புத்தூரில் பாப்பாத்தி அம்மன் விநாயகர், பிடாரியம்மன், மதுரை வீரன், கருப்பணசுவாமி ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில்உள்ளது. இங்கு கோவிலை புதிதாக கட்டுவது என்று முடிவு எடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் கோவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். கட்டுமான பணிகள் நிறைவடைந்ததைடுத்து இன்று கும்பாபிஷேக விழாவிற்கு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பூஜை, லட்ச்சார்ஜனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட இரண்டு காலையாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை இரண்டாம் காலை ஆக வேண்டி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை கலசத்திற்கு உற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ரத்தினம் பிள்ளை புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story