அனுமதியில்லாமல் மது விற்ற நபர் கைது

அனுமதியில்லாமல் மது விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் மது விற்ற நபர் கைது செய்யபட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம், கோவை காவேரி பாலத்தில் சந்தேகப்படும் வகையில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, விற்பனைக்காக பையில் 20 பீர் பாட்டில்களை வைத்திருந்ததும், இவர் திருச்செந்தூர் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், 35, என்பதும் தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்து, 20 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story