இரும்பு கடையில் திருட முயன்றவர் கைது!

இரும்பு கடையில் திருட முயன்றவர் கைது!
தூத்துக்குடியில் பழைய இரும்பு கடையில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் சொரிமுத்து (62), இவர் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் திருட முயன்ற வாலிபரை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், அவர் சவேரியார் புரத்தைச் சேர்ந்த மங்களபாண்டி மகன் தங்கதுரை (29) என்று தெரியவந்தது. இதையடுத்து கடையில் திருட முயன்றதாக போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story