ஆலங்குடியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ஆலங்குடியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
ஆலங்குடியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் ஆலங்குடி கலிபுல்லா நகரைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தநிலையில், சிவா மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் குணசேகரனை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இச்சம்பவம் ஆலங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story