சத்தியம் வாங்கி ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் கமிஷனர்

சத்தியம் வாங்கி ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் கமிஷனர்
முடக்கு சாலையில் நடைபெற்ற போக்குவரத்து சிக்னல் திறப்பு விழாவில் இந்நிகழ்வு நடைபெற்றது
மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் தேனி மெயின் ரோடு முடக்குச்சாலை சந்திப்பில் பதிய போக்குவரத்து சிக்னல் பாயிண்ட் மற்றும் போக்குவரத்து புதிய புறகாவல் நிலையத்தை திறந்து வைத்தும் அந்த சிக்னல் வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிங்களுக்கு புதிய தலைக்கவசம் வழங்கியும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார்கள். மேலும் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். உடன் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா, போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் மற்றும் செல்வின் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story