ஸ்ரீமங்கள விநாயகர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீமங்கள விநாயகர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் தெத்தூர் கொழிஞ்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது
மதுரை மாவட்டம் தெத்தூர் கொழிஞ்சிப்பட்டி பிரிவில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவாச்சாரியார் குமார் பட்டர் தலைமையிலும், தெய்வத் திரு தெய்வராஜ் வகையறா மகன் சீராளன் (ஜெயம் கொண்டான் காவல்துறை உதவி கண்காணிப்பாளர்) லதா ( பெரம்பலூர் காவல் ஆய்வாளர்) ராஜேஷ் கண்ணன், மகேஸ்வரன், அனிஷியா, சுகப்பிரியா சண்முகம் ( மதுரை மாநகர் பா.ஜ.க ஆலய மேம்பாட்டு பிரிவு) கல்பனா, மாலா ஆகியோர் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க எடுத்து வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகமானது சீரும் சிறப்புமாக நடைபெற்றது, அதனை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது, இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டினை தெய்வராஜ் வகையறாக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்,
Next Story