வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி
பலி
திருக்கோவிலூர் அடுத்த கரடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரவீன் குமார், 17; இவரது நண்பர் வெங்கட் சுபாஷ், 17; இருவரும் நேற்று மாலை திருக்கோவிலூர் சென்று பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலையில், தொட்டி அருகே எதிரில் அதிவேகமாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்துடன் பைக் நேருக்கு நேர் மோதியது.இதில் பைக் பின்னால் உட்கார்ந்து சென்ற பிரவீன் குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டிச் சென்ற வெங்கட் சுபாஷ் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் வெங்கட் சுபாஷை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டாட்டா ஏஸ் வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story