ஏவிபி நகரில் கணவனை இழந்த இளம் பெண் மாயம். தந்தை புகார்.

ஏவிபி நகரில் கணவனை இழந்த இளம் பெண் மாயம். தந்தை புகார்.
ஏவிபி நகரில் கணவனை இழந்த இளம் பெண் மாயம். தந்தை புகார். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏவிபி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் சத்யா வயது 30.இவரது கணவர் வடிவேலன் காலமாகிவிட்டார். இதனால் தனது தந்தை அண்ணாதுரை வீட்டில் வசித்து வந்தார் சத்யா. இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சத்யா வீடு திரும்பவில்லை. சத்யா வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும், எவ்வித தகவலும் கிடைக்காததால், தனது மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் அண்ணாதுரை புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story