விருத்தாசலத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

விருத்தாசலத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
மாவட்ட கல்வி அலுவலர் சேகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கீழ்க்கண்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சேகர் பாராட்டு விழா நடத்தினார், இதில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியம் ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காசிநாதன்,பண்ருட்டி ஒன்றியம் செட்டிபட்டரை காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நளினா,மங்களூர் ஒன்றியம் புலிகரம்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வீரமணி, பண்ருட்டி ஒன்றியம் வரிசாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கோகுலகண்ணன்,நல்லூர் ஒன்றியம் பெண்ணாடம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஹேம்குமாரி ஆகிய ஆசிரியர்கள் விருது பெற்றனர், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு விருதாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சேகர் பொன்னாடை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்.
Next Story